நடிகர் ரன்வீர் - க்கு ஆதரவளிக்கும் திரை பிரபலங்கள் பட்டியலில் இணைந்த தி காஷ்மீர் ஃபைல்ஸ் இயக்குனர்!2123758962


நடிகர் ரன்வீர் - க்கு ஆதரவளிக்கும் திரை பிரபலங்கள் பட்டியலில் இணைந்த தி காஷ்மீர் ஃபைல்ஸ் இயக்குனர்!


நடிகர் ரன்வீர் சிங் - இன் போட்டோஷூட் பற்றி புகார் அளிக்கப்பட்டு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பல திரை பிரபலங்கள் ரன்வீருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் ரன்வீர் சிங் :   

பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், தான் பங்கேற்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்து விடுவார். அதனால், பல சர்ச்சைகளிலும் சிக்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார். நடிகை தீபிகா படுகோனே- வை காதல் திருமணம் செய்த ரன்வீர், தனது ஃபேஷன் திறனை மிகவும் வித்தியாசமான மற்றும் விமர்சனத்திற்குறிய வகையில் அவ்வப்போது வெளிப்படுத்தி வருகிறார். 

சர்ச்சையில் சிக்கிய ரன்வீர் :

ஆனால், சமீப நாட்களாக எந்த சர்ச்சைகளிலும் சிக்காமல் இருந்த நடிகர் ரன்வீர், ஒரு போட்டோஷூட்டை நடத்தி, அந்த புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு, ஒட்டு மொத்த இணைய வாசிகளின் கவனத்தையும் பெற்றுவிட்டார். பிரபல சர்வதேச பதிப்பான தி பேப்பர் மேகசீனின் கவர் புகைப்படத்துக்காக போட்டோஷூட் செய்த ரன்வீர், நிர்வாணமாக போஸ் கொடுத்திருந்தார்.

 

போட்டோஷூட்டால் சந்தித்த விமர்சனம் : 

அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக, பல தரப்பினரிடமிருந்தும் விமர்சனங்கள் வந்துகொண்டுள்ளன. அமெரிக்காவில், தனது தனிப்பட்ட வீடியோக்களும், போட்டோக்களும் பதிவிட்டு இன்று முன்னணி பிரபலங்களில் ஒருவராக இருக்கும் கார்டேஷியன்களைப் போல, ரன்வீரும் ஆக முயற்சி செய்கிறார் என்றெல்லாம் விமர்சித்து வரும் நிலையில், அவரது மனைவி தீபிகாவையும்  நெட்டிசன்கள் மோசமாக கேலி செய்து வருகின்றனர். ஆனால், ஒரு சிலர், தைரியமாக இப்படி ஒரு போட்டோஷூட் நடத்தியதாக ரன்வீருக்கு தங்களது பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். 

ரன்வீர் மீது புகார் :

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வர, இது போன்ற நிர்வாண புகைப்படங்களை வெளியிட்டதற்காக நடிகர் ரன்வீர் சிங் மீது மும்பை செம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று அவருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட புகாரை கவனத்தில் கொண்டு, நடிகர் ரன்வீர் சிங் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் நிர்வாண படங்களை வெளியிட்டதற்காக அவர் மீது இபிகோ 292,293,509-ன் படி எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

 

ஆதரவளிக்கும் திரை பிரபலங்கள் :

இதனைத் தொடர்ந்து, ரன்வீருக்கு ஆதரவளிக்கும் வகையில், பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட், அர்ஜுன் கபூர், ராம் கோபால் வர்மா என பலரும் ஆதரவளித்து வந்த நிலையில், தற்போது தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தின் இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி ஆதரவு தெரிவித்து பேசியுள்ளார்.    

ஆலியா பட் :

இது குறித்து ஆலியா பட் பேசும் போது, தனக்குப் பிடித்த ரன்வீர் குறித்த எந்த ஒரு தவறான கருத்துகளையும் தான் ஆதரிக்க மாட்டேன் எனவும், தனக்கு அவரை மிகவும் பிடிக்கும் எனவும் பேசினார். மேலும் பேசிய அவர், ரன்வீர் அனைவருக்கும் பிடித்தமான மனிதர் என பேசி இருந்தார். 

இயக்குனர் ராம் கோபால் வர்மா :

இதுகுறித்து பேசிய இயக்குனர் ராம் கோபால் வர்மா, பாலின சமத்துவத்திற்கான நீதியைக் கோருவது அவரது வழி என நினைத்துக் கொள்ளுங்கள் என்றும் பெண்கள் தங்கள் கவர்ச்சியான உடலை காட்டிக்கொள்ளும் போது, ஏன் ஆண்களால் காட்ட முடியாது, ஆண்களை வேறு தரத்தில் மதிப்பிடுவது பாசாங்குத்தனம். என்றும் பெண்களைப் போலவே ஆண்களுக்கும் பல சம உரிமைகள் இருக்க வேண்டும் என பேசி இருந்தார். 

 

இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி :

இதுகுறித்து பேசிய தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தின் இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி, “இது மிகவும் முட்டாள்தனமான எஃப்ஐஆர். எந்த காரணமும் இல்லாமல் கவனத்தை ஈர்க்கும் ஒரு வேடிக்கையான வழக்கு இது. பெண்களின் உணர்வு புண்படுத்தப்படுவதாக எஃப்ஐஆரில் குறிப்பிடப்பட்டுள்ளது. பெண்களின் நிர்வாணப் படங்கள் அதிகமாக இருக்கும்போது, ​​அது ஆண்களின் மனதைப் புண்படுத்துமா? இது மிகவும் முட்டாள்தனமான வாதம்.

நமது கலாச்சாரத்தில் மனித உடல் எப்போதும் மதிக்கப்படுகிறது. மனித உடல் இறைவனின் மிக அழகான படைப்பு என்று நான் கூறுவேன். அதில் என்ன தவறு? எனக்கு அப்படிப்பட்ட விஷயங்கள் பிடிக்காது. நான் ஆதரிக்காத பழமைவாத சிந்தனையை இது காட்டுகிறது." என பேசியுள்ளார். 

தி லெஜெண்ட் திரைப்படம் வெளியாக இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

தி லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் என்ற ஜவுளி சாம்ராஜ்ஜியத்தை நடத்தி வரும் தி லெஜெண்ட் சரவணன் தற்போது தி லெஜெண்ட் படத்தில் கதாநாயகனாக என்ட்ரி கொடுத்து சினிமாத்துறையில் கால் பதித்துள்ளார். தி லெஜெண்ட் ப்ரோடுக்க்ஷன்ஸ் தயாரிப்பில் ஜேடி & ஜெர்ரி இந்த படத்தை இயக்கியுள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இந்த படத்தின் இசை உரிமையை திங்க் மியூசிக் நிறுவனம் பெற்றுள்ளது. மேலும் படத்தில் இருந்து மொசலோ மொசலு பாடலும், வாடி வாசல் பாடலும், போ போ போ பாடலும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தில் தி லெஜெண்ட் சரவணனுக்கு ஜோடியாக ஊர்வசி ரௌட்டலா நடித்துள்ளார். மேலும் படத்தில், பிரபு, விவேக்,மயில்சாமி, நாசர், தம்பி ராமைய்யா, சுமன், ராய் லட்சுமி, ரோபோ சங்கர் என பெரிய நட்சத்த்திர பட்டாளமே நடித்துள்ளனர்.  படத்தின் பாடல் வரிகளை வைரமுத்து, மதன் கார்க்கி, பா.விஜய், கபிலன், சினேகன் ஆகியோர் எழுதியுள்ளனர். 

 

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் தி லெஜெண்ட் திரைப்படம் பிரம்மாண்டமாக ஜூலை 28ம் தேதி வெளியாக உள்ளது. படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாக உள்ளது. மேலும் படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தி லெஜெண்ட் சரவெடி என்ற தலைப்பில் படத்தின் புது ட்ரைலர் தமிழ்,தெலுங்கு, ஹிந்தி,கன்னடம், மலையாளத்தில் வெளியானது. 

இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த சில தினங்களுக்கு முன்பாக தனியார் தொலைக்காட்சியில் ப்ரம்மாண்டமாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. தற்போது அந்த நிகழ்ச்சி யூடியூபில் வெளியாகி வைரலாகி  வருகிறது. இதனை ரசிகர்கள் வெகுவாக கொண்டாடி வருகின்றனர். மேலும் படத்திற்கு காத்திருப்பதாகவும், வெற்றி பெற தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் ரன்வீர் சிங் - இன் வித்தியாசமான போட்டோஷூட் அனைவரது கவனத்தையும் பெற்ற நிலையில், அவர் மீது மும்பை செம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. தற்போது அந்த புகாரின் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தனது வாழ்க்கையில் தனக்குப் பிடித்தது போல வாழ்ந்து வரும் பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், தான் இருக்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் ஏதாவது ஒரு வகையில், கவனம் ஈர்த்து விடுவார். அதனால், பல சர்ச்சைகளிலும் சிக்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார். நடிகை தீபிகா படுகோனேவை காதல் திருமணம் செய்த ரன்வீர், தனது ஃபேஷன் திறனை மிகவும் வித்தியாசமான, மற்றும் விமர்சனத்திற்குறிய வகையில் அவ்வப்போது வெளிப்படுத்தி வருகிறார். 

ஆனால், சமீப நாட்களாக எந்த சர்ச்சைக்குள்ளும் சிக்காமல் இருந்த நடிகர் ரன்வீர், ஒரு போட்டோஷூட்டை நடத்தி, அந்த புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு, ஒட்டு மொத்த இணைய வாசிகளின் கவனத்தையும் பெற்றுவிட்டார். பிரபல சர்வதேச பதிப்பான தி பேப்பர் மேகசீனின் கவர் புகைப்படத்துக்காக போட்டோஷூட் செய்த ரன்வீர், நிர்வாணமாக போஸ் கொடுத்திருந்தார்.

 

அந்த போட்டோக்கள் இணையத்தில் வைரலாக, பல தரப்பினரிடமிருந்தும் விமர்சனங்கள் வந்துகொண்டுள்ளன. அமெரிக்காவில், தனது தனிப்பட்ட வீடியோக்களும், போட்டோக்களும் பதிவிட்டு இன்று முன்னணி பிரபலங்களில் ஒருவராக இருக்கும் கார்டேஷியன்களைப் போல, ரனிவீரும் ஆக முயற்சி செய்கிறார் என்றெல்லாம் விமர்சித்து வரும் நிலையில், அவரது மனைவி தீபிகாவையும்  நெட்டிசன்கள் மோசமாக கேலி செய்து வருகின்றனர். ஆனால், ஒரு சிலர், தைரியமாக இப்படி ஒரு போட்டோஷூட் நடத்தியதாக ரன்வீருக்கு தங்களது பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். 

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வர, இது போன்ற நிர்வாண புகைப்படங்களை வெளியிட்டதற்காக நடிகர் ரன்வீர் சிங் மீது மும்பை செம்பூர் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது அவருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட புகாரை கவனத்தில் கொண்டு, நடிகர் ரன்வீர் சிங் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் நிர்வாண படங்களை வெளியிட்டதற்காக அவர் மீது இபிகோ 292,293,509-ன் படி எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இதனைத் தொடர்ந்து, ரன்வீருக்கு ஆதரவளிக்கும் வகையில், பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட், தனது புதிய படமான டார்லிங்-கிற்கான ப்ரொமோஷன்களில் பத்திரிக்கையாளர்களிடம் பேசியபோது, “எனக்குப் பிடித்த ரன்வீர் குறித்த எந்த ஒரு தவறான கருத்துகளையும் நான் ஆதரிக்க மாட்டேன். எனக்கு அவரை மிகவும் பிடிக்கும். மேலும், அவர் அனைவருக்கும் பிடித்தமான மனிதர்” என்று கூறினார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இது ஒரு புறம் இருக்க, மறு புறம் தென்னிந்திய ரன்வீர் ஆக மாறி வருகிறார் கோலிவுட் நடிகர் விஷ்ணு விஷால். தனது மனைவி எடுத்த தனது நிர்வாணப் புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டிருந்தார். இதுவும் படு வைரலாகி, கலவையான விமர்சனங்களைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

மகிழ்திருமேணி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் தான் கலகத் தலைவன். இந்த படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகி நல்ல வரவேறபைப் பெற்று வருகிறது.

சமீபத்தில் பல தமிழ் படங்களைத் தயாரித்தும் வெளியிட்டும் வரும் ரெட் ஜெயெண்ட் மூவீஸ் வெளியிட்ட சமீபத்திய படம் தான் நெஞ்சுக்கு நீதி. ஹிந்தி படமான ‘ஆர்டிக்கள் 15’ என்ற படத்தின் தம்ழி ரீமேக்காக உருவானாலும், தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றாற்போல உருவாகியது அந்த படம். பல சமூகத்தியக் கருத்துகளை உரைத்த இந்த படம், மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதோடு, விமர்சண ரீதியாகவும், வசூல் ரீதியாகவும், வெற்றிப் பெற்றது என்றே சொல்லலாம்.

இதனைத் தொடர்ந்து, உதயநிதி அடுத்து எந்த படங்களும் நடிக்கப்போவதில்லை என பல வதந்திகள் கிளம்பின. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், உதயநிதி, மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் தனது அடுத்தப் படமான ‘மாமன்னன்’ குறித்த அறிவிப்பை வெளியிட்டார். மேலும், பல படங்களில் நடிக்கவுள்ளதாகவும் கூறிய அவருக்கு, அடுத்தடுத்தப் படங்கள் தயாராக இருப்பது தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து, அவரது தயாரிப்பு நிறுவனம் ரெட் ஜெயண்ட் மூவிஸ்-இன் 15ம் ஆண்ட் விழாவில், கமல், தனது அடுத்த தயாரிப்பில், உதயநிதி கதாநாயகனாக நடிக்கிறார் என்று அறிவித்தார். இது அனைவருக்கும் மகிழ்ச்சி அளித்தது. 

அந்த மகிழ்ச்சியை மேலும் கூட்டும் அளவில், தற்போது வெளியாகியுள்ளது. ‘மீகாமன்’, ‘தடம்’ போன்ற படங்களை இயக்கிய மகிழ்திருமேணி இயக்கத்தில் ‘கலகத் தலைவன்’ என்ற படத்தில் நடிக்கிறார் உதயநிதி. இதன் மோஷன் போஸ்டரை, ரெட் ஜெயெண்ட் மூவீஸ்-இன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் வெளியிட்டதில், பலரும் வாழ்த்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். இந்த படத்தில், நிதி அகர்வால் கதாநாயகியாக நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கமலஹாசன் தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பின் 54 வது படத்தில் உதயநிதி நடிக்க இருப்பதாக கமல் அறிவித்துள்ளார்.

தற்போது பல படங்கள் தயாரித்து வெளியிட்டு வரும் ரெட் ஜெயண்ட் மூவீஸ் தயாரிப்பு நிறுவனம் தற்போது தனது 15வது ஆண்டைக் கடந்துள்ளது. அதனைக் கொண்டாடும் வகையில், நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சியில், பாலிவுட் நடிகர் ஆமீர் கானும், உலக நாயகன் கமலஹாசனும் கலந்துக் கொண்டனர்.

உலக நாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளியான சமீபத்திய படம் விக்ரம். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ராஜ் கமல் பிலிம்ஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவீஸ் இணைந்து தயாரித்த இந்த படத்தில், கமலுடன், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம், சூரியா என்ற பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்தது. அனிருத் இசையமைத்த இந்த படத்தின் பாடல்களும் பட் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது. இந்த் அபடம் முதல், உதயநிதியும், கமலுன் நெருங்கிய நண்பர்கள் ஆகினர்.

 

இந்நிலையில், நேற்று நடந்த நிக்ழச்சியில், கமல் ஒரு அறிவிப்புக் கொடுத்தார். தனது தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் ஃபிலிமிஸ் -இன் அடுத்தப் படத்தில், உதயநிதி நடிக்க இருப்பதாக அவர் அறிவித்தார். இந்த அறிவிப்பு, பெரும் இன்ப அதிர்ச்சியாக இருந்தது. இந்த படம், ராஜ் கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பின் 54 வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து, தனது ட்விட்டர் பக்கத்தில், உதயநிதி, “15 வருட ரெட் ஜெயண்ட் மூவீஸ்-ன் சினிமா பயணத்தை கொண்டாடும் விதமாக உடன் பங்காற்றியவர்களை நேற்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கௌரவித்தோம். ராஜ் கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் அடுத்த படத்தின் கதை நாயகனாகும் பெருமைமிகு வாய்ப்பை எனக்கு வழங்கி, அதற்கான அறிவிப்பை வெளியிட்ட கமலஹாசன் சாருக்கு நன்றி.” என பதிவிட்டிருந்தார். இந்த பதிவுக்கு, பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

தி லெஜெண்ட் திரைப்படம் வெளியாக இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், இன்று கேரள செய்தியாளர் சந்திப்பு பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதன் பின்னர் தி லெஜெண்ட் படத்தின் புது மலையாள ட்ரைலர் வெளியானது.

தி லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் என்ற ஜவுளி சாம்ராஜ்ஜியத்தை நடத்தி வரும் தி லெஜெண்ட் சரவணன் தற்போது தி லெஜெண்ட் படத்தில் கதாநாயகனாக என்ட்ரி கொடுத்து சினிமாத்துறையில் கால் பதித்துள்ளார். தி லெஜெண்ட் ப்ரோடுக்க்ஷன்ஸ் தயாரிப்பில் ஜேடி & ஜெர்ரி இந்த படத்தை இயக்கியுள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இந்த படத்தின் இசை உரிமையை திங்க் மியூசிக் நிறுவனம் பெற்றுள்ளது. மேலும் படத்தில் இருந்து மொசலோ மொசலு பாடலும், வாடி வாசல் பாடலும், போ போ போ பாடலும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தில் தி லெஜெண்ட் சரவணனுக்கு ஜோடியாக ஊர்வசி ரௌட்டலா நடித்துள்ளார். மேலும் படத்தில், பிரபு, விவேக்,மயில்சாமி, நாசர், தம்பி ராமைய்யா, சுமன், ராய் லட்சுமி, ரோபோ சங்கர் என பெரிய நட்சத்த்திர பட்டாளமே நடித்துள்ளனர்.  படத்தின் பாடல் வரிகளை வைரமுத்து, மதன் கார்க்கி, பா.விஜய், கபிலன், சினேகன் ஆகியோர் எழுதியுள்ளனர். 

 

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் தி லெஜெண்ட் திரைப்படம் பிரம்மாண்டமாக ஜூலை 28ம் தேதி வெளியாக உள்ளது. படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாக உள்ளது. மேலும் படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தி லெஜெண்ட் சரவெடி என்ற தலைப்பில் படத்தின் புது ட்ரைலர் தமிழ்,தெலுங்கு, ஹிந்தி,கன்னடத்தில் வெளியானது. 

இந்நிலையில்,இன்று தி லெஜெண்ட் படத்தின் கேரளா செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. செண்டை மேளம் முழங்க பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில், இந்த செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.  தி லெஜெண்ட் சரவணன், ஊர்வஷி ரௌட்டலா, ராய் லக்ஷ்மி, இயக்குனர் ஜேடி & ஜெர்ரி ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும், அதன் பின்னர், தி லெஜெண்ட் சரவெடி என்ற தலைப்பில், படத்தின் புது மலையாள ட்ரைலர் வெளியாகியுள்ளது. இதனை ரசிகர்கள் வெகுவாக கொண்டாடி வருகின்றனர். அதோடு படம் வெற்றி பெற தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். 

Comments

Popular posts from this blog