5 மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை!169661832


5 மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை!


ஆண்டிப்பட்டி: தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையின் உயரம் 71 அடி. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்மழை மற்றும் முல்லைப் பெரியாறு அணையில் திறந்து  விடப்படும் உபரி நீர் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக வைகை அணை நீர்மட்டம் நேற்று காலை 6 மணிக்கு 66 அடியை எட்டியது. இதனையடுத்து தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட வைகை ஆற்றங்கரையோர மக்களுக்கு முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. வைகை அணை மதகுபகுதியில் அமைக்கப்பட்ட அபாய சங்கு ஒலிக்கப்பட்டது. அணைக்கு தற்போது விநாடிக்கு 2,288 கனஅடி நீர் வருகிறது. குடிநீர் தேவைக்காக 69 கனஅடி மட்டும் திறக்கப்படுவதால், விரைவில் முழுக்கொள்ளளவை எட்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Comments

Popular posts from this blog