கிரிக்கெட் உலகை அசர வைத்த இந்திய அணி!! வரலாறு படைத்தது இந்தியா!!1094618258


கிரிக்கெட் உலகை அசர வைத்த இந்திய அணி!! வரலாறு படைத்தது இந்தியா!!


இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் திறமையால் இந்திய அணி ODI, டெஸ்ட், டி20 என்று அனைத்து தரவரிசை பட்டியலிலும் முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது. ஐசிசி-யின் போட்டிகளில் அதிக புள்ளிகளை எடுத்து அனைத்து தரவரிசையில் முதல் இடத்தை இந்திய அணி பிடித்துள்ளது. டி-20 போட்டியில் 267 புள்ளிகள், ஒருநாள் போட்டியில் 114 புள்ளிகள், டெஸ்ட் போட்டியில் 115 புள்ளிகள் என்று எல்லாவற்றிலும் அதிக புள்ளிகள் எடுத்து இந்தியா முதலிடத்தில் உள்ளது. நாக்பூரில் உள்ள VCA ஸ்டேடியத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்டில் இந்திய அணி மகத்தான இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த வெற்றியின் விளைவாக, ரோஹித் ஷர்மாவின் அணி இப்போது ஆட்டத்தின் மூன்று வடிவங்களிலும் தரவரிசையில் நம்பர் 1 அணியாக மாறியுள்ளது. இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு இதற்கு மேல் ஒரு மகிழ்ச்சியளிக்கும் விஷயம் இருக்கவே முடியாது. இது குறித்து ட்விட்டர் பக்கத்தில் இந்த பதிவு வைரலாகி வருகிறது.

Comments

Popular posts from this blog